Thursday, 18 April 2013

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 8% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 8% உயர்த்த அமைச்சரவை இன்று (18.04.2013)  ஒப்புதல் வழங்கியது. இதன் படி அகவிலைப்படி 72% - லிருந்து  80% ஆக உயரும்.

Tuesday, 16 April 2013

ஆசிரியர் சங்க சிக்கண நாணய கூட்டுறவு சங்க தேர்தல் - வெற்றி

ஆசிரியா் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத் தோ்தல் 12.04.2013 அன்று நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று (16.04.2013) அன்று வெளியிடப்பட்டன. 

        குழித்துறை சரகம், முன்சிறை சரகம், கருங்கல் சரகம் ஆகியவற்றில் நடந்த தோ்தலில் PSTA அமோக வெற்றி பெற்றது.  ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.....நன்றி......நன்றி.....

17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.


பள்ளிக்கல்வி இயக்குனரகம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 5,081 பேர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் 260 தையல் ஆசிரியர்களும் 4 இசை ஆசிரியர்களும், 888 உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2494 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.


மாநகராட்சி பள்ளிகளில்பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட அனைத்து தரப்பு ஆசிரியர்களாக 232 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.


இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நிரப்பப்படவேண்டியவை. மொத்தத்தில் 16ஆயிரத்து 400 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.


இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார்.