Thursday, 18 April 2013
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 8% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 8% உயர்த்த அமைச்சரவை இன்று (18.04.2013) ஒப்புதல் வழங்கியது. இதன் படி அகவிலைப்படி 72% - லிருந்து 80% ஆக உயரும்.
Tuesday, 16 April 2013
ஆசிரியர் சங்க சிக்கண நாணய கூட்டுறவு சங்க தேர்தல் - வெற்றி
ஆசிரியா் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத் தோ்தல் 12.04.2013 அன்று நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று (16.04.2013) அன்று வெளியிடப்பட்டன.
குழித்துறை சரகம், முன்சிறை சரகம், கருங்கல் சரகம் ஆகியவற்றில் நடந்த தோ்தலில் PSTA அமோக வெற்றி பெற்றது. ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.....நன்றி......நன்றி.....
17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
பள்ளிக்கல்வி
இயக்குனரகம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 5,081 பேர்கள்
நியமிக்கப்படுகிறார்கள். மேலும் 260 தையல் ஆசிரியர்களும் 4 இசை
ஆசிரியர்களும், 888 உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2494 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
மாநகராட்சி
பள்ளிகளில்பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட
அனைத்து தரப்பு ஆசிரியர்களாக 232 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நிரப்பப்படவேண்டியவை. மொத்தத்தில் 16ஆயிரத்து 400 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார்.
Sunday, 3 March 2013
11 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம்
"வரும் மே மாதத்துடன், பழைய கல்வி
கட்டணம் முடிவுக்கு வரும் நிலையில், 11,626 தனியார் பள்ளிகளுக்கு, ஆகஸ்ட் 26ம்
தேதிக்குள், அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்"
என, கட்டண நிர்ணயக் குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்.
அவர், நேற்று நிருபர்களிடம்
கூறியதாவது: கட்டண நிர்ணயக் குழுவின் முதல் தலைவர், கோவிந்தராஜன் நிர்ணயித்த, கட்டண
காலக்கெடு, 11,626 பள்ளிகளுக்கு, வரும் மே மாதத்துடன் முடிகிறது. இதனால், அந்த
பள்ளிகளுக்கு, அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கும் சேர்த்து, புதிய கட்டணங்களை
நிர்ணயிக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம்.
முதலில், கட்டண நிர்ணயிப்பில்
இருந்து விடுபட்ட, 910 பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, விசாரணை
துவங்கி உள்ளது. தினமும், 100 பள்ளிகளிடம் விசாரணை நடக்கும். இந்த விசாரணை, மூன்று
வாரங்களுக்கு நடக்கும். அதன் பின், 11 ஆயிரம் பள்ளிகள் மீதான விசாரணை
நடக்கும்.
அனைத்துப் பள்ளிகளுக்கும், ஆகஸ்ட்
26ம் தேதிக்குள், புதிய கட்டணங்களை நிர்ணயித்து விடுவோம். பள்ளிகளுக்கு, 7 முதல்,
10 சதவீதம் வரை, கட்டணங்களை உயர்த்தலாம் என, சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
இதற்கு, ஒரு மதிப்பீட்டை தயாரித்து, அதனடிப்படையில், கட்டணங்களை உயர்த்தலாம்
எனவும், ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
எனவே, பள்ளிகளின் ஒட்டு மொத்த
தரத்தின் அடிப்படையில், கிரேடு வகைப்படுத்தி, கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு
உள்ளோம். இவ்வாறு சிங்காரவேலு கூறினார்.
Wednesday, 27 February 2013
தமிழக அமைச்சரவை மாற்றம் , புதிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.வைகைச்செல்வன்
தமிழக அமைச்சரவையில்
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த திருமதி.கோகுல இந்திரா, பள்ளி கல்வி, இளைஞர் நலன்
சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்த திரு.என்.ஆர்.சிவபதி, சுகாதாரத்துறை
அமைச்சராக இருந்த டாக்டர் திரு.கே.எஸ்.விஜய் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதில், திருமதி. டி.பி.பூனாட்சி, டாக்டர் திரு.வைகைச்செல்வன்,
திரு.கே.சி.வீரமணி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய அமைச்சர்களாக
நியமிக்கப்பட்டுள்ள டி.பி.பூனாட்சிக்கு கதர் மற்றும் கிராமத் தொழில்துறை இலாகா
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கே.சி.வீரமணிக்கு சுகாதாரத்துறை இலாகா ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. வைகைச்செல்வன் பள்ளி கல்வித்துறை மற்றும் இளைஞர் நலத்துறை
அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.செந்தூர்பாண்டியன் சுற்றுலாத்துறை அமைச்சராக
நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமியிடம் கூடுதலாக
சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புஇலாகா
ஒப்படைக்கப்பட்டுள்ளது
புதிய அமைச்சர்கள் நாளை (28.02.2013) காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்., 30 தேதி அரசு விடுமுறை ரத்து செய்து அரசு உத்தரவு
வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பதற்காக, செப்., 30ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை, ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டு தோறும்,
பண்டிகைகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களுக்கு,
அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதில், ஆண்டு தோறும், செப்., 30ம் தேதி,
வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிவதால், வர்த்தக வங்கிகள் மற்றும் கூட்டுறவு
வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த விடுமுறையை, அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டாம் என, மத்திய அரசின் நிதித்துறை, மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தது.இதை ஏற்று, வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிப்பிற்காக, அறிவிக்கப்பட்ட, செப்., 30ம் தேதியை, அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி, விடுமுறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
Friday, 15 February 2013
Friday, 8 February 2013
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தகவல்
அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை என கூறுகின்றனர். இந்த திட்டம்
இரத்து செய்யப்படும் என ஏற்கனவே அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதையும் அரசு ஊழியர்,
ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பணம் எங்கே போகிறது என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எழுப்பட்ட கேள்விக்கு மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் கீழ்வரும் பதிலளித்துள்ளார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. எனினும் இத்திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Comments (Atom)